Wednesday, September 3, 2014

கிருஷ்ணா கிருஷ்ணா கோவிந்தா!

கிருஷ்ணா கிருஷ்ணா கோவிந்தா
கோகுல கிருஷ்ணா கோவிந்தா
பக்த வத்ஸலா கோவிந்தா
பாண்டு ரங்கா கோவிந்தா!

தேவகி நந்தன கோவிந்தா
தேவர்கள் ரட்சக கோவிந்தா
மாதவ தேவா கோவிந்தா
யாதவ தீபா கோவிந்தா!

ராதா மாதவ கோவிந்தா
பாமா ருக்மிணி கோவிந்தா
கோபியர் லோலா கோவிந்தா
கோபால கிருஷ்ணா கோவிந்தா!

கோவிந்தா ஹரி கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா!


--கவிநயா

Thursday, August 28, 2014

ஓம் கணநாதா கஜானனா!

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தித் திருநாள் வாழ்த்துகள்!




ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

அன்னை பார்வதி அகிலத்துக் கீந்த அழகுப் புதல்வா கஜானனா
எந்தை சிவனின் அன்புக் குகந்த அருமைப் புதல்வா கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

வேண்டும் வரங்களை வேண்டும் விதமாய்த் தந்தருள்பவனே கஜானனா
வேண்டி மிக வருந்தி அழைப்பவருக்கு விரைந்தருள்பவனே கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

பாலும் தேனும் பாகும் பருப்பும் கலந்து வந்தோமே கஜானனா
பாகாய்க் கனியும் அன்பை அதிலே கலந்து தந்தோமே கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

மோதகத்துள்ளே பூரணம் வைத்துச் செய்து வந்தோமே கஜானனா
மோகங்கள் களைந்தெமைப் பூரணமாக்க அருள்புரிவாயே கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

அருகம்புல் கூட அற்புதம் என்று மகிழ்ந்து ஏற்பவனே கஜானனா
குறுகி உனைப் பணிந்து கும்பிட்டோமே கனிந்தருள்வாயே கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

மூஷிகந்தன்னை வாகனமாக விரும்பி ஏற்றவனே கஜானனா
மூச்சுக் காற்றாலே உடலத்தைச் சுமக்க உதவி செய்பவனே கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

கள்ளங் கபடமற்ற பிள்ளைகள் விரும்பும் கஜமுகத்தோனே கஜானனா
வெள்ளை உள்ளங்களை விரும்பி அதிலே குடிபுகுவாயே கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

கஜமுகங் கொண்டு கருணை பொழியும் கனிமுகத்தோனே கஜானனா
பஜனைகள் செய்துனைப் போற்றிப் பணிந்தோம் பரிவுகொள்வாயே கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா


--கவிநயா



Monday, September 9, 2013

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் - தமிழில்

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தித் திருநாள் வாழ்த்துகள்!

ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ கணேச பஞ்சரத்னத்தை முன்பு ஒரு முறை எம்.எஸ். அம்மாவின் பாடலோடு பதிவு செய்திருந்தேன். அப்போது, இதனைப் பொருளோடு எழுதினால் உதவியாக இருக்குமே என்று அறிவன் குறிப்பிட்டிருந்தார். இப்போதுதான் அதற்கு விநாயகர் மனம் வைத்திருக்கிறார்.

தமிழில் அதே மெட்டில் பாடலாகவே எழுத முயற்சித்திருக்கிறேன். குற்றம் குறைகள் இருந்தால் பிள்ளையாரும் அவர் பிள்ளைகளும் (நீங்கதாங்க!) மன்னித்தருள வேண்டும்.

வட மொழி வரி ஒவ்வொன்றுக்கும் இரண்டு தமிழ் வரிகளாக வந்திருக்கிறது. நீங்களும் பாடிப் பாருங்களேன்!


ஸ்ரீ கணேச பஞ்சரத்னம்


முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்திஸாதகம்
கலாதராவதம்ஸகம் விலஸிலோகரக்ஷகம்
அநாயகைகநாயகம் விநாசிதே பதைத்யகம்
நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநாயகம்


மோதகத்தை மகிழ்ச்சியோடு கரத்தி லேந்தும் நாதனே!
முக்தியினை பக்தருக்கு அருளும் டுண்டி ராஜனே!
பிறைமதியை முடியில் சூடிக் காட்சி தரும் காந்தனே!
போற்றித் துதிக்கும் அடியவரைக் காத்தருளும் வேந்தனே!
தன்னையாளும் தலைவனில்லா தலைவனேவி நாயகா!
தாரணியைக் காக்கவென்று தானவனைக் கொன்றவா!
பக்தர்களின் பாவங்களை நாசம் செய்யும் நாயகா!
பணிந்து உன்னை வணங்குகின்றேன் காப்பாய்வி நாயகா!
நதேதராதிபீகரம் நவோதிதார்க்கபாஸ்வரம்
நமத்ஸ¤ராரி நிர்ஜரம் நதாதிகாபதுத்தரம்
ஸ¤ரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்


உன்னை வணங்கித் தொடங்கி விட்டால் விக்னம் தீர்த்து அருளுவாய்!
உதய காலக் கதிரவன் போல் ஒளி மிகுந்து விளங்குவாய்!
தேவர்களைக் காத்திடவே அசுரர்களைச் சிட்சிப்பாய்!
ஆபத்துகள் எதுவந்தாலும் அடியவரை இரட்சிப்பாய்!
உம்பருக்கு அரசனே நவநிதிக்கும் நாதனே!
யானைகளின் ராஜனே கணங்களுக்குத் தலைவனே!
தேவருக்கு தேவனாகி மஹா தேவன் ஆனவா!
தெண்டனிட்டு வணங்குகின்றேன் காப்பாய்வி நாயகா!


ஸமஸ்தலோகசங்கரம் நிரஸ்ததைத்யகுஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்


அகிலமெல்லாம் சுகம்பெறவே வரமளிக்கும் கணபதி!
அசுரயானை கஜாசுரனைக் கொன்றழித்த கணபதி!
பானை வயிற்றில் புவனமெல்லாம் பொத்திக் காக்கும் கணபதி!
யானை முகத்து ஐங்கரனே அழிவில்லாத கணபதி!
பிள்ளைகளின் பிழைகள் தம்மை மன்னித்தருளும் கணபதி!
பிழைகள் தம்மைப் பொறுத்து நல்ல வழியில் செலுத்தும் கணபதி!
பக்தருக்கு மகிழ்ச்சி, கீர்த்தி, மேன்மை நல்கும் கணபதி!
பணிந்து உன்னை வணங்குகின்றேன் காத்திடுவாய் கணபதி!


அகிஞ்சநார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம்
புராரிபூர்வநந்தநம் ஸ¤ராரிகர்வ சர்வணம்
ப்ரபஞ்சநாசபீஷணம் தநஞ்சயாதிபூஷணம்
கபோலதாநவாரணம் பஜேபுராண வாரணம்


ஏழை பங் காளனாகி காக்கும் ஏக தந்தனே!
அநாதியான வேதங்களும் வணங்கும் வக்ர துண்டனே!
திரிபுரத்தை ஒரு சிரிப்பால் எரித்த ஈசன் மைந்தனே!
தானவரின் கர்வந் தன்னை ஒடுக்கும் ஐந்து கரத்தனே!
காலனையும் கலங்கச் செய்யும் காலனே கஜானனே!
விஜயன் போன்ற வீரர்களும் பணியும் விகட ராஜனே!
முதற் பொருளாய்த் தோன்றி உலகை வழி நடத்தும் ஜேஷ்டனே!
மாசில்லாத அன்பினாலே வணங்குகின்றோம் நேசனே!

நிதாந்தகாந்ததந்தகாந்தம் அந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்தஹீந மந்தராயக்ருந்தநம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்

வெண்மையான தந்தம் மின்னத் திகழும் விக்ன ராஜனே!
இடது காலால் காலன் தன்னை உதைத்த சிவனின் பாலனே!
கற்பனைக்கும் எட்டாத வடிவம் கொண்ட கஜமுகா!
துக்கம் தீர்த்து விக்னங்களைக் களைந்து விடும் ஹேரம்பா!
தவ முனிவர் தேவர் மூவர் யாவருடைய மனதிலும்
நிரந்தரமாய் நிலைத்திருக்கும் நிகரில்லாத நாயகா!
ஒற்றைத் தந்தத்தோடு திகழும் ஒப்பில்லாத உன்னையே
ஒரு மனதாய் உள்ளத்திலே சிந்திக்கின்றேன் உண்மையே!


மஹாகணேச பஞ்சரத்ந மாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதிஸ்மரந் கணேச்வரம்
அரோகதாமதோஷதாம் ஸ¤ஸாஹிதீம் ஸ¤புத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூதிமப்யுபைதிஸோசிராத்

காலையிலே எழுந்ததுமே கணபதியை நெஞ்சிலே
கருத்துடனே நினைத்தபடி சிரத்தையுடன் வணங்கியே
மஹாகணேச பஞ்சரத்னம் என்னும் இந்த நூலையே
மந்திரமாய் மனதில் வைத்து ஜெபித்து வரும் போதிலே
பிணிகளெல்லாம் நொடியினிலே விட்டு விலகி ஓடுமே!
பிறவிப்பிணி என்னும் பெரிய பிணியும் தீர்ந்து போகுமே!
ஆனைமுகன் அருளினாலே கல்வி செல்வம் கவித்துவம்
ஆரோக்யம் ஆயுள் என்று நன்மை அனைத்தும் சேருமே!



--கவிநயா 

விக்ன விநாயகனின் திருவடிகள் சரணம். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.


பொருள் உதவிக்கு நன்றி: http://visvacomplex.com/ganesa_pancharathnam.html


Friday, December 28, 2012

தந்தையே! விந்தையே!

ஆருத்ரா தரிசனத்தன்று சிவனுக்கு ஒரு பஜனைப் பாடல் இடுவது பொருத்தம் தானே? :)




ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

ஆனைமுகம் ஆனவனின் அன்பு மிக்க தந்தையே
அவனியென்று உன்னைச் சுற்ற கனியைத் தந்த விந்தையே

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

நெற்றிக் கண்ணின் நெருப்பில் பிள்ளை பெற்றெடுத்த தந்தையே
நெற்றிக் கண்ணால் மன்மதனைச் சுட்டெரித்த விந்தையே

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

இளைய பிள்ளை முருகனிடம் சேதி கேட்ட தந்தையே
சேதி சொன்ன பிள்ளையினை சுவாமி என்ற விந்தையே

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

குறுஞ் சிரிப்பால் உமை மனதைக் கவர்ந்திழுத்த தந்தையே
ஒரு சிரிப்பால் முப்புரத்தை எரித்து விட்ட விந்தையே

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

படித் துறையில் பிள்ளை அழ ஓடி வந்த தந்தையே
அம்மை யப்பனாகி நின்று அருள் புரிந்த விந்தையே

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

பிரசவத்தில் பெண் துடிக்க விரைந்து வந்த தந்தையே
பிள்ளைப் பேறு பார்க்கத் தானே தாயுமான விந்தையே

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

சுடலைப் பொடி பூசிக் கொண்டு நடனமிடும் தந்தையே
அடியும் முடியும் காணலின்றி ஓங்கி நின்ற விந்தையே

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய


--கவிநயா


Saturday, December 22, 2012

சரணம் ஐயப்பா!



சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
வரணும் ஐயப்பா இப்போ வரணும் ஐயப்பா

Group: சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
வரணும் ஐயப்பா இப்போ வரணும் ஐயப்பா

சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
வரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா

Group: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
            வரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா

ஹரிஹர சுதனே ஆனந்த ரூபா சரணம் ஐயப்பா
சபரி கிரீசா சத்ய ஸ்வரூபா சரணம் ஐயப்பா

Group: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
            வரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா

எருமேலி வாசா ஏழை பங்காளா சரணம் ஐயப்பா
கரிமேலி சாஸ்தா கலியுக வரதா சரணம் ஐயப்பா

Group: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
            வரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா

காடும் மேடும் நடந்து வந்தோம் சரணம் ஐயப்பா
கல்லும் முள்ளும் கடந்து வந்தோம் சரணம் ஐயப்பா

Group: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
            வரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா

கல்லாம் உள்ளம் கனியச் செய்வாய் சரணம் ஐயப்பா
கனியின் சுவையாய் நீயே வருவாய் சரணம் ஐயப்பா

Group: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
            வரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா

புலியின் பாலைக் கொண்டு வந்தாயே சரணம் ஐயப்பா - எங்கள்
கிலியினை நீக்கி அருளிடு வாயே சரணம் ஐயப்பா

Group: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
            வரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா

இருமுடி தாங்கி வந்தோம் அப்பா சரணம் ஐயப்பா
இருவினை அழித்து அருள் புரிவாயே சரணம் ஐயப்பா

Group: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
            வரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா

நெய் யபிஷேகம் ஏற்றுக் கொள்வாயே சரணம் ஐயப்பா
நிலையாய் நெஞ்சில் குடியிருப் பாயே சரணம் ஐயப்பா

Group: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
            வரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா

வேண்டும் யாவும் கொடுத்திடு வாயே சரணம் ஐயப்பா - எதும்
வேண்டாத உள்ளம் தந்திடுவாயே சரணம் ஐயப்பா

Group: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
            வரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா

பக்தரின் குறைகள் தீர்த்திடு வாயே சரணம் ஐயப்பா
குறையே இல்லா பக்தியைத் தருவாய் சரணம் ஐயப்பா

Everyone: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
                  வரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா


--கவிநயா

Monday, January 9, 2012

அடைக்கலம் நீயே!


அம்மா சரணம் அம்மா சரணம்
அம்பிகை யேஉன் பதம்சரணம்
அன்பின் வடிவே அருளின் பொருளே
அடைக்கலம் நீயே அருள்சரணம்

பாலை வடிவாய் விளங்கும் தாயே
பாலாம் பிகையே பதம்சரணம்
பாலை யெல்லாம் சோலை யாக்கும்
வசந்தம் நீயே வாசரணம்

காமனை எரித்த காமேச் வரனை
கண்ணால் ஆள்பவ ளேசரணம்
காமங்கள் எரித்து கனிவுடன் எமையும்
காப்பாய் காமேச் வரிசரணம்

இதழில் கனியும் புன்னகை யாலே
இதயம் கவர்பவ ளேசரணம்
மதகை மீறிப் பெருகும் அன்பில்
மகிழ்ந் தாடும்மா தேசரணம்

இல்லை என்றே சொல்லா தெதையும்
அள்ளித் தருபவ ளேசரணம்
தொல்லை எதுவும் இல்லாமல் எமை
தொடர்ந்தே காக்கும் தாய் சரணம்

ஆயிர மாயிரம் நாமங்கள் விளங்கும்
அதிசய வடிவுடை யாய்சரணம்
அதிலொரு நாமம் சொன்னால் கூட
அகமகிழ்ந் தருளிடு வாய்சரணம்

அம்மா என்று சொல்லும் போதே
அகஇருள் விலகிடு மேசரணம்
சும்மா உன்னை நினைத்தால் கூட
சுகம்மிக வாகிடு மேசரணம்

அம்மா சரணம் அம்மா சரணம்
அம்பிகை யேஉன் பதம்சரணம்
அன்பின் வடிவே அருளின் பொருளே
அடைக்கலம் நீயே அருள்சரணம்!


--கவிநயா