ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஆனைமுகம் ஆனவனின் அன்பு மிக்க
தந்தையே
அவனியென்று உன்னைச் சுற்ற கனியைத்
தந்த விந்தையே
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
நெற்றிக் கண்ணின் நெருப்பில்
பிள்ளை பெற்றெடுத்த தந்தையே
நெற்றிக் கண்ணால் மன்மதனைச் சுட்டெரித்த
விந்தையே
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
இளைய பிள்ளை முருகனிடம் சேதி
கேட்ட தந்தையே
சேதி சொன்ன பிள்ளையினை சுவாமி
என்ற விந்தையே
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
குறுஞ் சிரிப்பால் உமை மனதைக்
கவர்ந்திழுத்த தந்தையே
ஒரு சிரிப்பால் முப்புரத்தை எரித்து
விட்ட விந்தையே
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
படித் துறையில் பிள்ளை அழ ஓடி
வந்த தந்தையே
அம்மை யப்பனாகி நின்று அருள்
புரிந்த விந்தையே
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
பிரசவத்தில் பெண் துடிக்க விரைந்து
வந்த தந்தையே
பிள்ளைப் பேறு பார்க்கத் தானே
தாயுமான விந்தையே
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
சுடலைப் பொடி பூசிக் கொண்டு நடனமிடும்
தந்தையே
அடியும் முடியும் காணலின்றி ஓங்கி
நின்ற விந்தையே
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
--கவிநயா
No comments:
Post a Comment
வாங்க, வணக்கம்!