Saturday, December 25, 2010
ஓம் நமோ நமசிவாய!
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ
கொன்றையைத் தரித்தவனே காமனை யெரித்தவனே
காலனை யுதைத்தவனே ஓம்நமோ நமோ
மங்கையை வரித்தவனே கங்கையைத் தரித்தவனே
முப்புரம் எரித்தவனே ஓம்நமோ நமோ
செஞ்சடை தரித்தவனே சேந்தனை அளித்தவனே
சிந்தையில் அமர்ந்தவனே ஓம்நமோ நமோ
செந்நிறம் படைத்தவனே சந்திரன் தரித்தவனே
விந்தைகள் புரிந்தவனே ஓம்நமோ நமோ
தன்னுரு மறைத்தவனே தென்திசை தவத்தவனே
தேவரும் துதிப்பவனே ஓம்நமோ நமோ
மண்தனைச் சுமந்தவனே மேனியைப் பகிர்ந்தவனே
தேவியை மணந்தவனே ஓம்நமோ நமோ
அன்பினில் களிப்பவனே ஆனந்தம் அளிப்பவனே
இன்பங்கள் கொடுப்பவனே ஓம்நமோ நமோ
நெஞ்சினில் இருப்பவனே நேசத்தில் மணப்பவனே
துன்பங்கள் அழிப்பவனே ஓம்நமோ நமோ
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ
--கவிநயா
பி.கு. வைத்தீஸ்வரன் கோவில் வழிநடைப் பயணத்துக்காக ஒருத்தர் மெட்டு கொடுத்து, எழுத முடியுமான்னு கேட்டிருந்தார். அவருக்காக எழுதிய பாடல்...
Monday, December 13, 2010
கோபாலா கோபாலா...
என்னிடம் இருக்கிற 'அருள் வழி துதிகள்' என்ற புத்தகத்திலிருந்து...
கோபாலா கோபாலா
கோகுல நந்தன கோபாலா!
நந்த முகுந்தா கோபாலா
நவநீத சோரா கோபாலா!
வேணு விலோலா கோபாலா
விஜய கோபாலா கோபாலா!
ராதா கிருஷ்ணா கோபாலா
ரமணீய வேஷா கோபாலா!
காளிய மர்த்தன கோபாலா
கௌஸ்துப பூஷண கோபாலா!
முரளீ லோலா கோபாலா
முகுந்தப் பிரியா கோபாலா!
ராதா ரமணா கோபாலா
ராஜீவ நேத்ரா கோபாலா!
யசோதா பாலா கோபாலா
யதுகுல திலகா கோபாலா!
நளின விலோசன கோபாலா
கோமள வசனா கோபாலா!
புராண புருஷா கோபாலா
புண்ய ஸ்லோகா கோபாலா!
கனகாம் பரதா கோபாலா
கருணா மூர்த்தே கோபாலா!
கஞ்ச விலோசன கோபாலா
கஸ்தூரி திலகா கோபாலா!
கோபாலா கோபாலா
கோகுல நந்தன கோபாலா!
நந்த முகுந்தா கோபாலா
நவநீத சோரா கோபாலா!
வேணு விலோலா கோபாலா
விஜய கோபாலா கோபாலா!
ராதா கிருஷ்ணா கோபாலா
ரமணீய வேஷா கோபாலா!
காளிய மர்த்தன கோபாலா
கௌஸ்துப பூஷண கோபாலா!
முரளீ லோலா கோபாலா
முகுந்தப் பிரியா கோபாலா!
ராதா ரமணா கோபாலா
ராஜீவ நேத்ரா கோபாலா!
யசோதா பாலா கோபாலா
யதுகுல திலகா கோபாலா!
நளின விலோசன கோபாலா
கோமள வசனா கோபாலா!
புராண புருஷா கோபாலா
புண்ய ஸ்லோகா கோபாலா!
கனகாம் பரதா கோபாலா
கருணா மூர்த்தே கோபாலா!
கஞ்ச விலோசன கோபாலா
கஸ்தூரி திலகா கோபாலா!
Wednesday, December 1, 2010
அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பனுக்கு அரோகரா!
ஒருவர் பாட, குழுவினர் 'அரோகரா' போடலாம்...
அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பனுக்கு அரோகரா!
பித்தனுக்குப் பாடம் சொன்ன பாலனுக்கு அரோகரா!
முத்தமிழின் காவலனாம் முருகனுக்கு அரோகரா!
சித்தமெல்லாம் நிறைந்திருக்கும் செல்வனுக்கு அரோகரா!
வெற்றிவடி வேலனுக்கு வீரனுக்கு அரோகரா!
சக்திசிவ பாலனுக்கு சேந்தனுக்கு அரோகரா!
ஆனைமுகன் இளவலுக்கு அன்புடனே அரோகரா!
ஆறுமுக சாமிக்கு ஆசையோடு அரோகரா!
வள்ளியம்மை நாதனுக்கு வாஞ்சையுடன் அரோகரா!
சொல்லிச் சொல்லிப் பாடிடுவோம் செல்லத்துக்கு அரோகரா!
--கவிநயா
அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பனுக்கு அரோகரா!
பித்தனுக்குப் பாடம் சொன்ன பாலனுக்கு அரோகரா!
முத்தமிழின் காவலனாம் முருகனுக்கு அரோகரா!
சித்தமெல்லாம் நிறைந்திருக்கும் செல்வனுக்கு அரோகரா!
வெற்றிவடி வேலனுக்கு வீரனுக்கு அரோகரா!
சக்திசிவ பாலனுக்கு சேந்தனுக்கு அரோகரா!
ஆனைமுகன் இளவலுக்கு அன்புடனே அரோகரா!
ஆறுமுக சாமிக்கு ஆசையோடு அரோகரா!
வள்ளியம்மை நாதனுக்கு வாஞ்சையுடன் அரோகரா!
சொல்லிச் சொல்லிப் பாடிடுவோம் செல்லத்துக்கு அரோகரா!
--கவிநயா
Subscribe to:
Posts (Atom)