Tuesday, October 4, 2011

அரஹரோஹரா!



அரஹரோஹரா முருகா அரஹரோஹரா
அரஹரோஹரா கந்தா அரஹரோஹரா
அரஹரோஹரா குமரா அரஹரோஹரா
அரஹரோஹரா வேலா அரஹரோஹரா

பச்சை மயில் வாகனனே அரஹரோஹரா
பழனி மலை பாலகனே அரஹரோஹரா
கச்சை யிலே உன் பெயரை அரஹரோஹரா
கச்சி தமாய் கட்டிக் கொண்டோம் அரஹரோஹரா

காவடிகள் எடுத்து வந்தோம் அரஹரோஹரா
கால்கடுக்க ஆடிவந்தோம் அரஹரோஹரா
வேலெடுத்து நீ வரணும் அரஹரோஹரா
வேதனைகள் தீர்த்திடணும் அரஹரோஹரா

(அரஹரோஹரா)

கண்மணியே கனியமுதே அரஹரோஹரா
கனிந்தநெஞ்சிற் கினியவனே அரஹரோஹரா
(ஞானப்)பழமுன்னைத் தேடிவந்தோம் அரஹரோஹரா
பழவினைகள் விரட்டிடுவாய் அரஹரோஹரா

(அரஹரோஹரா)

பலவாறாய் உனையிங்கு அரஹரோஹரா
பாசமுடன் அழைத்தோமே அரஹரோஹரா
பச்சைமயில் மீதேறி அரஹரோஹரா
இக்கணமே வந்திடுவாய் அரஹரோஹரா

(அரஹரோஹரா)


--கவிநயா

No comments:

Post a Comment

வாங்க, வணக்கம்!