Monday, October 11, 2010

ஆலோலம்!

ஒருவர் பாட, குழுவினர் ஹரோஹரா சொல்லணும்.
இணையத்திலிருந்து எடுத்தது. இட்டவருக்கு நன்றிகள் பல.



ஆலோலம் பாடுகின்ற
வள்ளியம்மை கழுத்தில்
அணியாரம் இட்ட பெருமான் - ஹரோஹரா

ஆகாயம் பூமியிடை
நீராவி போல் வடிவில்
ஆதாரமான பெருமான் - ஹரோஹரா

மேலாளர் கீழாளர்
பேதங்கள் இல்லாது
மெய்யான பெருமான் - ஹரோஹரா

மின்னாகி இடியாகி
மழையாகி காற்றாகி
விளைவாக நின்ற பெருமான் - ஹரோஹரா

கோலாலம்பூர் வளர்
கோ தண்டபாணி - இவன்
கோவில் கொண்டடு மனமே - ஹரோஹரா

கூற்றேதும் வாராது
கொடுநோயும் சேராது
குறையாத வாழ்வு மிகுமே - ஹரோஹரா

ஓம் என்ற சிறு முட்டை
உள் வீடு அவன் வீடு
உன் வீடும் அந்த இடமே - ஹரோஹரா

ஓசைக்கு மணியுண்டு
பூசைக்கு மணமுண்டு
உன் வாழ்வு கந்தன் வசமே - ஹரோஹரா

நாமேன்ற ஆங்காரம்
நமதென்ற எக்காளம்
நடவாது வேலனிடமே - ஹரோஹரா

நடக்கட்டும் பார்ப்போம்
என்றிருக்கட்டும் உன் உள்ளம்
நலம் யாவும் வீடு வருமே - ஹரோஹரா

கோமன்னன் வாழ்கின்ற
கோலாலம்பூர் செந்தூர்
கொடி கட்டி ஆள விடுமே - ஹரோஹரா

கொண்டாடு கொண்டாடு
தெண்டாயுதத் தானை
குறையாது செல்வ மிகுமே - ஹரோஹரா

7 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அரோகரா! அரோகரா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வள்ளியம்மை கழுத்தில் அணியாரம் இட்ட பெருமான்!
ஆதாரமான பெருமான்! மெய்யான பெருமான்! விளைவாக நின்ற பெருமான்!
சூப்பர் வரிகள்! அப்படியே என் முருகன் நடந்து வரும் போது சொல்லும் பராக் பராக் போலவே இருக்கு! :)

//ஓம் என்ற சிறு முட்டை
உள் வீடு அவன் வீடு
உன் வீடும் அந்த இடமே//

அது அவன் வீடு இல்லை! என் வீடு! எனக்கு-ன்னு அவன் பார்த்துப் பார்த்துக் கட்டிய காதல் வீடு! :)

Kavinaya said...

வருக கண்ணா.

ஆமாம், முதல் முறை வாசிச்சப்பவே எனக்கும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு இந்தப் பாடல்.

//எனக்கு-ன்னு அவன் பார்த்துப் பார்த்துக் கட்டிய காதல் வீடு! :)//

அது என்ன காதல் வீடு? எனக்கு ஒண்ணும் புரியலை. சுருக்கமாக விளக்கவும் :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அது என்ன காதல் வீடு? எனக்கு ஒண்ணும் புரியலை. சுருக்கமாக விளக்கவும் :)//

//ஓம் என்ற சிறு முட்டை
உள் வீடு அவன் வீடு
உன் வீடும் அந்த இடமே//

அ= அவன்
ம்= நான்
உ = உறவு

உன் தன்னோடு (அ)
உறவேல் (உ)
நமக்கு (ம்)

உன்தன்னோடு உறவேல் நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது = அதான் காதல் வீடு-ன்னு சொன்னேன்! உறவு அப்படி! டேய் முருகா முருகா! :)

Kavinaya said...

//உன்தன்னோடு உறவேல் நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது = அதான் காதல் வீடு-ன்னு சொன்னேன்! உறவு அப்படி! டேய் முருகா முருகா! :)//

அது சரி... தோழி இல்லாம ஒண்ணும் நடக்காதுன்னு தெரியுமே :)

குமரன் (Kumaran) said...

சொற்களையும் பா அமைப்பையும் பார்த்தால் கண்ணதாசன் போல் தோன்றுகிறது. அவருடைய தனிக் கவிதைகளில் (திரைப்படத்திற்காக எழுதாதவை) இந்த பா அமைப்பைப் பார்த்திருக்கிறேன்.

Kavinaya said...

நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் குமரா :)

Post a Comment

வாங்க, வணக்கம்!