![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOJ9xnKXKyy-dNIFisBaUn2s5DhWBj6zSoawyJ0Q1p65-bm_AWD8D3PD_lugiL9ogckZ-2ANNJyf__G3pfwAL8mP3uoP1l8Tlej1TVcBmR2tO-9eFwSW0x57KR2zMmpq9tSrW6ElQNVsE/s400/275px-Murugan1.gif)
அன்பருக்கு அன்பனே நீ வாவா ஷண்முகா
ஆறுபடை வீடுடையாய் வாவா ஷண்முகா
இன்பமய ஜோதியே நீ வாவா ஷண்முகா
ஈசனுமை பாலகனே வாவா ஷண்முகா
உரகசயனன் மருகோனே வாவா ஷண்முகா
ஊமைக் குபதேசித்தவா வாவா ஷண்முகா
எட்டுக்குடி வேலவா நீ வாவா ஷண்முகா
ஏறுமயில் வாகனனே வாவா ஷண்முகா
ஐங்கரக் கிளையவனே வாவா ஷண்முகா
அகிலலோக நாயகனே வாவா ஷண்முகா
ஒய்யாரி வள்ளிலோலா வாவா ஷண்முகா
ஓம்காரத் தத்துவமே வாவா ஷண்முகா
ஔவைக் குபதேசித்தவா வாவா ஷண்முகா
அருணகிரிக் கருள்சுரந்தாய் வாவா ஷண்முகா
ஆடிவாநீ ஓடிவாநீ வாவா ஷண்முகா
ஓடிவாநீ ஆடிவாநீ வாவா ஷண்முகா
வெற்றிவேல் முருகனுக்கு... அரோஹரா!!
No comments:
Post a Comment
வாங்க, வணக்கம்!