Thursday, February 24, 2011

ஓம் முருகா ஓம்!


ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்

வேல்முருகா வினைதீர்க்க வாமுருகா ஓம்
மால்மருகா மருள்நீக்க வாமுருகா ஓம் (1)

ஆறெழுத்து மந்திரத்தை ஓம்முருகா ஓம்
அன்புடனே ஓதுகின்றோம் ஓம்முருகா ஓம் (2)

ஏறெடுத்தும் பாராமல் ஓம்முருகா ஓம்
நீயிருப்ப தழகாமோ ஓம்முருகா ஓம் (3)

தேர்விடுத்த சாரதியின் ஓம்முருகா ஓம்
பேரெடுத்த மருமகனே ஓம்முருகா ஓம் (4)

வேல்கொடுத்த அம்பிகையின் ஓம்முருகா ஓம்
வீரமைந்த னானவனே ஓம்முருகா ஓம் (5)

கால்பிடித்த பக்தர்களை ஓம்முருகா ஓம்
காப்பதுன்றன் கடமையன்றோ ஓம்முருகா ஓம் (6)

ஆறுமுக மானவனே ஓம்முருகா ஓம்
அழகுவடி வேலவனே ஓம்முருகா ஓம் (7)

பச்சைமயில் வாகனனே ஓம்முருகா ஓம்
பழனிமலை பாலகனே ஓம்முருகா ஓம் (8)

பொய்கையிலே தாமரையில் ஓம்முருகா ஓம்
பொன்போல தவழ்ந்தவனே ஓம்முருகா ஓம் (9)

இதயமெனும் தாமரையில் ஓம்முருகா ஓம்
ஏந்திக்கொள்ள ஏங்குகிறோம் ஓம்முருகா ஓம் (10)

ஏறுமயில் மீதினிலே ஓம்முருகா ஓம்
ஏறிஇப்போ வந்திடணும் ஓம்முருகா ஓம் (11)

ஏழையெமக் கிரங்கிடுவாய் ஓம்முருகா ஓம்
இக்கணமே வந்திடுவாய் ஓம்முருகா ஓம் (12)


--கவிநயா

Wednesday, February 2, 2011

ஓம் நமோ நமசிவாய - 2



ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ ந மசிவாய
ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ நமோ
ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ ந மசிவாய
ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ நமோ

ஒருகரத்தில் தீயையேந்தி மறுகரத்தில் உடுக்கையேந்தி
அண்டங்கள் யாவையுமே படைத்துக்காத்து அழிப்பவனே
ஒருகரத்தில் அபயந்தந்து மறுகரத்தில் பாதங்காட்டி
அண்டியவர் யாவரையும் அன்புடனே காப்பவனே

அந்திநிறம் கொண்டவனே ஆதிமூல மானவனே
நந்திதேவ வாகனனே துன்பந்தீர்க்கும் தூயவனே
விந்தைபல புரிபவனே சிந்தையெலாம் நிறைபவனே
சொந்தமென வந்தவனே சோதியாகி நின்றவனே

ஒருபதத்தைத் தூக்கிநின்று மறுபதத்தில் அசுரன்தன்னை
அடக்கிவைத்து அடியவர்க்கு அருள்கொடுக்கும் ஆண்டவனே
ஒருசெவிஎழிற் குண்டலமும் மறுசெவிபனை ஓலைதாங்க
அம்பலத்தில் நடனமிடும் ஆதிசிவ நாயகனே

நஞ்சையுண்ட காரணத்தால் நீலகண்டன் ஆனவனே
அஞ்சுகத்தை வாமங் கொண்டு அர்த்தநாரி யானவனே
நெஞ்சுக்குள்ளே நர்த்தனங்கள் நித்தம்நித்தம் ஆடுவோனே
விஞ்சுகின்ற அன்புசெய்ய சித்தத்துள்ளே வாழுவோனே

ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ ந மசிவாய
ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ நமோ
ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ ந மசிவாய
ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ நமோ

--கவிநயா

பி.கு. போன இடுகையில் இட்ட பாடலில் இன்னும் கொஞ்சம் சேர்த்து...