Monday, November 8, 2010

ஓம் நமசிவாய ஓம்!



ஓம் நம சிவாய ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம்
ஓம் நம சிவாய ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம்

இமயத்தின் முடியில் உமையுடன் இருப்பான்
ஓம் நம சிவாய ஓம்
இதயத்தில் இருத்த இன்பங்கள் அளிப்பான்
ஓம் நம சிவாய ஓம்

அண்டங்கள் அசைய அவன்நட மிடுவான்
ஓம் நம சிவாய ஓம்
தண்டைகள் இசைய திருநடம் புரிவான்
ஓம் நம சிவாய ஓம்

ஒருசிரிப் பினிலே முப்புரம் எரித்தான்
ஓம் நம சிவாய ஓம்
எரிநெருப் பினிலே முருகனை அளித்தான்
ஓம் நம சிவாய ஓம்

தென்மு கமாக தவத்தினில் இருப்பான்
ஓம் நம சிவாய ஓம்
சண் முகனிடத்தில் மந்திரம் கேட்டான்
ஓம் நம சிவாய ஓம்

காமனை எரித்தான் கங்கையைத் தரித்தான்
ஓம் நம சிவாய ஓம்
கண்மணி உமையை இடத்தினில் வரித்தான்
ஓம் நம சிவாய ஓம்

ஓம் நம சிவாய ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம்
ஓம் நம சிவாய ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம்


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://aboutshiva.com/about_shiva_home.html

No comments:

Post a Comment

வாங்க, வணக்கம்!