Sunday, September 19, 2010

பிள்ளையார் பிள்ளையார்




பிள்ளையார் பிள்ளையார்
பெருமை வாய்ந்த பிள்ளையார்

ஆற்றங்கரையின் ஓரத்திலே
அரசமரத்தின் நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார்
வினைகள் தீர்க்கும் பிள்ளையார்

மண்ணினாலே செய்திடினும்
மஞ்சளினாலே செய்திடினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை
நெஞ்சில் காட்டும் பிள்ளையார்

அவல்பொரி கடலையும்
அரிசிகொழுக் கட்டையும்
கவலையின்றி தின்னுவார்
கண்ணைமூடித் தூங்குவார்

கலியுகத்தின் விந்தையை
காணவேண்டி அனுதினமும்
எலியின்மீது ஏறியே
இஷ்டம்போல சுற்றுவார்

பிள்ளையார் பிள்ளையார்
பெருமைவாய்ந்த பிள்ளையார்

**

2 comments:

குமரன் (Kumaran) said...

சின்னக்குழந்தைகளுக்கு ஏற்ற பாடல் இது அக்கா.

Kavinaya said...

முதல் வருகை! பிள்ளையாரோட தம்பி :) ரொம்ப சந்தோஷம், குமரா!

Post a Comment

வாங்க, வணக்கம்!