Sunday, April 10, 2011

ராம ராம ராம ராம என்னும் நாமமே...

அனைவருக்கும் இனிய ஸ்ரீராம நவமி நல்வாழ்த்துகள்!



ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத நாதன் தந்த நல்ல வேதமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத சங் கடங் கள் தூர ஓடுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத துயரம் யாவும் தூசு ஆகுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத நற் பலன் கள் வந்து சேருமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத நம்மைக் காக்கும் காவ லாகுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத கோடி நன்மை யாவும் கூடுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத இம்மை மறுமை இன்றி தீருமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத வாயு மைந்தன் அன்பு மீறுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத நெஞ்சம் பாடும் இன்ப கீதமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத உள்ளம் அன்பு வெள்ள மாகுமே

--கவிநயா

சுப்பு தாத்தா பாடித் தந்தது... மிக்க நன்றி சுப்பு தாத்தா!

Friday, March 18, 2011

வேங்கைமரமானவரே வேலாயுதா!



வேல்வேல் வேல்முருகா வேலாயுதா
வேங்கைமர மானவரே வேலாயுதா (வேல்

வேல்வேல் வேல்முருகா வேலாயுதா
வேதனைகள் தீருமையா வேலாயுதா

குன்றத்தில் அமர்ந்தவனே வேலாயுதா
குறைகள் எல்லாம் தீர்த்துவைப்பாய் வேலாயுதா
அருட்சுடராய் வந்தவரே வேலாயுதே
ஆறுமுக மானவரே வேலாயுதா (வேல்

செந்தூரில் வாழ்பவனே வேலாயுதா
சென்மமதை தீர்த்திடுவாய் வேலாயுதா
பழனிமலை ஆண்டவரே வேலாயுதா
பழவினையை நீக்கிடுவாய் வேலாயுதா (வேல்

சுவாமிமலை சுவாமிநாதா வேலாயுதா
சுப்ரமண்ய மானவரே வேலாயுதா
திருத்தணிகை மலைசெல்வனே வேலாயுதா
திருவருளை அருளவேண்டும் வேலாயுதா (வேல்

சோலைமலை முருகனே வேலாயுதா
சொர்க்கமெல்லாம் தெரியுதப்பா வேலாயுதா
குன்றக்குடிக் குமரனே வேலாயுதா
குறவள்ளி மணாளரே வேலாயுதா (வேல்

காவடிகள் ஆட்டத்திலே வேலாயுதா
கஷ்டமெல்லாம் தீர்ந்துபோகும் வேலாயுதா
பாற்குடத்தின் கூட்டமெல்லாம் வேலாயுதா
பார்க்கப்பார்க்க ஆனந்தமே வேலாயுதா (வேல்

கருணையோடு காத்தருள்வாய் வேலாயுதா
கந்தாஉன்னை தெண்டனிட்டோம் வேலாயுதா (வேல்

Thursday, February 24, 2011

ஓம் முருகா ஓம்!


ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்

வேல்முருகா வினைதீர்க்க வாமுருகா ஓம்
மால்மருகா மருள்நீக்க வாமுருகா ஓம் (1)

ஆறெழுத்து மந்திரத்தை ஓம்முருகா ஓம்
அன்புடனே ஓதுகின்றோம் ஓம்முருகா ஓம் (2)

ஏறெடுத்தும் பாராமல் ஓம்முருகா ஓம்
நீயிருப்ப தழகாமோ ஓம்முருகா ஓம் (3)

தேர்விடுத்த சாரதியின் ஓம்முருகா ஓம்
பேரெடுத்த மருமகனே ஓம்முருகா ஓம் (4)

வேல்கொடுத்த அம்பிகையின் ஓம்முருகா ஓம்
வீரமைந்த னானவனே ஓம்முருகா ஓம் (5)

கால்பிடித்த பக்தர்களை ஓம்முருகா ஓம்
காப்பதுன்றன் கடமையன்றோ ஓம்முருகா ஓம் (6)

ஆறுமுக மானவனே ஓம்முருகா ஓம்
அழகுவடி வேலவனே ஓம்முருகா ஓம் (7)

பச்சைமயில் வாகனனே ஓம்முருகா ஓம்
பழனிமலை பாலகனே ஓம்முருகா ஓம் (8)

பொய்கையிலே தாமரையில் ஓம்முருகா ஓம்
பொன்போல தவழ்ந்தவனே ஓம்முருகா ஓம் (9)

இதயமெனும் தாமரையில் ஓம்முருகா ஓம்
ஏந்திக்கொள்ள ஏங்குகிறோம் ஓம்முருகா ஓம் (10)

ஏறுமயில் மீதினிலே ஓம்முருகா ஓம்
ஏறிஇப்போ வந்திடணும் ஓம்முருகா ஓம் (11)

ஏழையெமக் கிரங்கிடுவாய் ஓம்முருகா ஓம்
இக்கணமே வந்திடுவாய் ஓம்முருகா ஓம் (12)


--கவிநயா

Wednesday, February 2, 2011

ஓம் நமோ நமசிவாய - 2



ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ ந மசிவாய
ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ நமோ
ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ ந மசிவாய
ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ நமோ

ஒருகரத்தில் தீயையேந்தி மறுகரத்தில் உடுக்கையேந்தி
அண்டங்கள் யாவையுமே படைத்துக்காத்து அழிப்பவனே
ஒருகரத்தில் அபயந்தந்து மறுகரத்தில் பாதங்காட்டி
அண்டியவர் யாவரையும் அன்புடனே காப்பவனே

அந்திநிறம் கொண்டவனே ஆதிமூல மானவனே
நந்திதேவ வாகனனே துன்பந்தீர்க்கும் தூயவனே
விந்தைபல புரிபவனே சிந்தையெலாம் நிறைபவனே
சொந்தமென வந்தவனே சோதியாகி நின்றவனே

ஒருபதத்தைத் தூக்கிநின்று மறுபதத்தில் அசுரன்தன்னை
அடக்கிவைத்து அடியவர்க்கு அருள்கொடுக்கும் ஆண்டவனே
ஒருசெவிஎழிற் குண்டலமும் மறுசெவிபனை ஓலைதாங்க
அம்பலத்தில் நடனமிடும் ஆதிசிவ நாயகனே

நஞ்சையுண்ட காரணத்தால் நீலகண்டன் ஆனவனே
அஞ்சுகத்தை வாமங் கொண்டு அர்த்தநாரி யானவனே
நெஞ்சுக்குள்ளே நர்த்தனங்கள் நித்தம்நித்தம் ஆடுவோனே
விஞ்சுகின்ற அன்புசெய்ய சித்தத்துள்ளே வாழுவோனே

ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ ந மசிவாய
ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ நமோ
ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ ந மசிவாய
ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ நமோ

--கவிநயா

பி.கு. போன இடுகையில் இட்ட பாடலில் இன்னும் கொஞ்சம் சேர்த்து...

Saturday, December 25, 2010

ஓம் நமோ நமசிவாய!



ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ

கொன்றையைத் தரித்தவனே காமனை யெரித்தவனே
காலனை யுதைத்தவனே ஓம்நமோ நமோ
மங்கையை வரித்தவனே கங்கையைத் தரித்தவனே
முப்புரம் எரித்தவனே ஓம்நமோ நமோ

செஞ்சடை தரித்தவனே சேந்தனை அளித்தவனே
சிந்தையில் அமர்ந்தவனே ஓம்நமோ நமோ
செந்நிறம் படைத்தவனே சந்திரன் தரித்தவனே
விந்தைகள் புரிந்தவனே ஓம்நமோ நமோ

தன்னுரு மறைத்தவனே தென்திசை தவத்தவனே
தேவரும் துதிப்பவனே ஓம்நமோ நமோ
மண்தனைச் சுமந்தவனே மேனியைப் பகிர்ந்தவனே
தேவியை மணந்தவனே ஓம்நமோ நமோ

அன்பினில் களிப்பவனே ஆனந்தம் அளிப்பவனே
இன்பங்கள் கொடுப்பவனே ஓம்நமோ நமோ
நெஞ்சினில் இருப்பவனே நேசத்தில் மணப்பவனே
துன்பங்கள் அழிப்பவனே ஓம்நமோ நமோ

ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ

--கவிநயா

பி.கு. வைத்தீஸ்வரன் கோவில் வழிநடைப் பயணத்துக்காக ஒருத்தர் மெட்டு கொடுத்து, எழுத முடியுமான்னு கேட்டிருந்தார். அவருக்காக எழுதிய பாடல்...

Monday, December 13, 2010

கோபாலா கோபாலா...

என்னிடம் இருக்கிற 'அருள் வழி துதிகள்' என்ற புத்தகத்திலிருந்து...


கோபாலா கோபாலா
கோகுல நந்தன கோபாலா!

நந்த முகுந்தா கோபாலா
நவநீத சோரா கோபாலா!

வேணு விலோலா கோபாலா
விஜய கோபாலா கோபாலா!

ராதா கிருஷ்ணா கோபாலா
ரமணீய வேஷா கோபாலா!

காளிய மர்த்தன கோபாலா
கௌஸ்துப பூஷண கோபாலா!

முரளீ லோலா கோபாலா
முகுந்தப் பிரியா கோபாலா!

ராதா ரமணா கோபாலா
ராஜீவ நேத்ரா கோபாலா!

யசோதா பாலா கோபாலா
யதுகுல திலகா கோபாலா!

நளின விலோசன கோபாலா
கோமள வசனா கோபாலா!

புராண புருஷா கோபாலா
புண்ய ஸ்லோகா கோபாலா!

கனகாம் பரதா கோபாலா
கருணா மூர்த்தே கோபாலா!

கஞ்ச விலோசன கோபாலா
கஸ்தூரி திலகா கோபாலா!

Wednesday, December 1, 2010

அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பனுக்கு அரோகரா!

ஒருவர் பாட, குழுவினர் 'அரோகரா' போடலாம்...


அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பனுக்கு அரோகரா!
பித்தனுக்குப் பாடம் சொன்ன பாலனுக்கு அரோகரா!

முத்தமிழின் காவலனாம் முருகனுக்கு அரோகரா!
சித்தமெல்லாம் நிறைந்திருக்கும் செல்வனுக்கு அரோகரா!

வெற்றிவடி வேலனுக்கு வீரனுக்கு அரோகரா!
சக்திசிவ பாலனுக்கு சேந்தனுக்கு அரோகரா!

ஆனைமுகன் இளவலுக்கு அன்புடனே அரோகரா!
ஆறுமுக சாமிக்கு ஆசையோடு அரோகரா!

வள்ளியம்மை நாதனுக்கு வாஞ்சையுடன் அரோகரா!
சொல்லிச் சொல்லிப் பாடிடுவோம் செல்லத்துக்கு அரோகரா!


--கவிநயா