Showing posts with label முருகன். Show all posts
Showing posts with label முருகன். Show all posts

Tuesday, October 4, 2011

அரஹரோஹரா!



அரஹரோஹரா முருகா அரஹரோஹரா
அரஹரோஹரா கந்தா அரஹரோஹரா
அரஹரோஹரா குமரா அரஹரோஹரா
அரஹரோஹரா வேலா அரஹரோஹரா

பச்சை மயில் வாகனனே அரஹரோஹரா
பழனி மலை பாலகனே அரஹரோஹரா
கச்சை யிலே உன் பெயரை அரஹரோஹரா
கச்சி தமாய் கட்டிக் கொண்டோம் அரஹரோஹரா

காவடிகள் எடுத்து வந்தோம் அரஹரோஹரா
கால்கடுக்க ஆடிவந்தோம் அரஹரோஹரா
வேலெடுத்து நீ வரணும் அரஹரோஹரா
வேதனைகள் தீர்த்திடணும் அரஹரோஹரா

(அரஹரோஹரா)

கண்மணியே கனியமுதே அரஹரோஹரா
கனிந்தநெஞ்சிற் கினியவனே அரஹரோஹரா
(ஞானப்)பழமுன்னைத் தேடிவந்தோம் அரஹரோஹரா
பழவினைகள் விரட்டிடுவாய் அரஹரோஹரா

(அரஹரோஹரா)

பலவாறாய் உனையிங்கு அரஹரோஹரா
பாசமுடன் அழைத்தோமே அரஹரோஹரா
பச்சைமயில் மீதேறி அரஹரோஹரா
இக்கணமே வந்திடுவாய் அரஹரோஹரா

(அரஹரோஹரா)


--கவிநயா

Tuesday, September 20, 2011

சீக்கிரமாய் வா!


முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா வா!
பக்தர்க் கருளும் சக்திக் கொழுந்தே
சரவண பவனே வா!

வண்ண மயிலேறி வாகாய் அமர்ந்து
சின்னக் குமரா வா!
சின்னக் குழந்தை வடிவில் ப்ரணவ
பொருள் சொன்னவனே வா!

விண்ணும் மண்ணும் வியந்தே போற்றும்
வடிவே லவனே வா!
கண்ணும் மனமும் கசியத் துதித்தோம்
கண்ணின் மணியே வா!

கன்னல் தமிழில் கவிதை சொல்வேன்
செல்லக் குமரா வா!
மின்னல் போலே எம்மைக் காக்க
விரைந்தே நீயும் வா!

சொல்லும் கவியில் சொல்லாய் பொருளாய்
சுவையாய் அமைவாய் வா!
கல்லும் கனியும் தமிழின் சுவையில்
கனிந்தே நீயும் வா!

சரவண பவனே சண்முக குகனே
சடுதியில் இங்கே வா!
சங்கரன் மகனே சங்கடம் தீர்க்க
சீக்கிரமாய் நீ வா!


--கவிநயா

ஒவ்வொரு பத்திக்கும் பிறகு,

"முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா வா"

என்கிற வரிகளை குழுவினர் இரண்டு முறை பாடலாம்.

Friday, March 18, 2011

வேங்கைமரமானவரே வேலாயுதா!



வேல்வேல் வேல்முருகா வேலாயுதா
வேங்கைமர மானவரே வேலாயுதா (வேல்

வேல்வேல் வேல்முருகா வேலாயுதா
வேதனைகள் தீருமையா வேலாயுதா

குன்றத்தில் அமர்ந்தவனே வேலாயுதா
குறைகள் எல்லாம் தீர்த்துவைப்பாய் வேலாயுதா
அருட்சுடராய் வந்தவரே வேலாயுதே
ஆறுமுக மானவரே வேலாயுதா (வேல்

செந்தூரில் வாழ்பவனே வேலாயுதா
சென்மமதை தீர்த்திடுவாய் வேலாயுதா
பழனிமலை ஆண்டவரே வேலாயுதா
பழவினையை நீக்கிடுவாய் வேலாயுதா (வேல்

சுவாமிமலை சுவாமிநாதா வேலாயுதா
சுப்ரமண்ய மானவரே வேலாயுதா
திருத்தணிகை மலைசெல்வனே வேலாயுதா
திருவருளை அருளவேண்டும் வேலாயுதா (வேல்

சோலைமலை முருகனே வேலாயுதா
சொர்க்கமெல்லாம் தெரியுதப்பா வேலாயுதா
குன்றக்குடிக் குமரனே வேலாயுதா
குறவள்ளி மணாளரே வேலாயுதா (வேல்

காவடிகள் ஆட்டத்திலே வேலாயுதா
கஷ்டமெல்லாம் தீர்ந்துபோகும் வேலாயுதா
பாற்குடத்தின் கூட்டமெல்லாம் வேலாயுதா
பார்க்கப்பார்க்க ஆனந்தமே வேலாயுதா (வேல்

கருணையோடு காத்தருள்வாய் வேலாயுதா
கந்தாஉன்னை தெண்டனிட்டோம் வேலாயுதா (வேல்

Thursday, February 24, 2011

ஓம் முருகா ஓம்!


ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்

வேல்முருகா வினைதீர்க்க வாமுருகா ஓம்
மால்மருகா மருள்நீக்க வாமுருகா ஓம் (1)

ஆறெழுத்து மந்திரத்தை ஓம்முருகா ஓம்
அன்புடனே ஓதுகின்றோம் ஓம்முருகா ஓம் (2)

ஏறெடுத்தும் பாராமல் ஓம்முருகா ஓம்
நீயிருப்ப தழகாமோ ஓம்முருகா ஓம் (3)

தேர்விடுத்த சாரதியின் ஓம்முருகா ஓம்
பேரெடுத்த மருமகனே ஓம்முருகா ஓம் (4)

வேல்கொடுத்த அம்பிகையின் ஓம்முருகா ஓம்
வீரமைந்த னானவனே ஓம்முருகா ஓம் (5)

கால்பிடித்த பக்தர்களை ஓம்முருகா ஓம்
காப்பதுன்றன் கடமையன்றோ ஓம்முருகா ஓம் (6)

ஆறுமுக மானவனே ஓம்முருகா ஓம்
அழகுவடி வேலவனே ஓம்முருகா ஓம் (7)

பச்சைமயில் வாகனனே ஓம்முருகா ஓம்
பழனிமலை பாலகனே ஓம்முருகா ஓம் (8)

பொய்கையிலே தாமரையில் ஓம்முருகா ஓம்
பொன்போல தவழ்ந்தவனே ஓம்முருகா ஓம் (9)

இதயமெனும் தாமரையில் ஓம்முருகா ஓம்
ஏந்திக்கொள்ள ஏங்குகிறோம் ஓம்முருகா ஓம் (10)

ஏறுமயில் மீதினிலே ஓம்முருகா ஓம்
ஏறிஇப்போ வந்திடணும் ஓம்முருகா ஓம் (11)

ஏழையெமக் கிரங்கிடுவாய் ஓம்முருகா ஓம்
இக்கணமே வந்திடுவாய் ஓம்முருகா ஓம் (12)


--கவிநயா

Wednesday, December 1, 2010

அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பனுக்கு அரோகரா!

ஒருவர் பாட, குழுவினர் 'அரோகரா' போடலாம்...


அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பனுக்கு அரோகரா!
பித்தனுக்குப் பாடம் சொன்ன பாலனுக்கு அரோகரா!

முத்தமிழின் காவலனாம் முருகனுக்கு அரோகரா!
சித்தமெல்லாம் நிறைந்திருக்கும் செல்வனுக்கு அரோகரா!

வெற்றிவடி வேலனுக்கு வீரனுக்கு அரோகரா!
சக்திசிவ பாலனுக்கு சேந்தனுக்கு அரோகரா!

ஆனைமுகன் இளவலுக்கு அன்புடனே அரோகரா!
ஆறுமுக சாமிக்கு ஆசையோடு அரோகரா!

வள்ளியம்மை நாதனுக்கு வாஞ்சையுடன் அரோகரா!
சொல்லிச் சொல்லிப் பாடிடுவோம் செல்லத்துக்கு அரோகரா!


--கவிநயா

Sunday, November 14, 2010

காவடியாம் காவடி!


காவடியாம் காவடி கந்தவேலன் காவடி
கண்கொள்ளாக் காட்சி தரும் கடம்பனுக்குக் காவடி
வேல்முருகன் நாமத்திலே விதவிதமாய்க் காவடி
வெற்றிவேலன் காவடி வீரவேலன் காவடி
சிங்கார வேலனுக்குச் சின்னச்சின்னக் காவடி
வண்ணமயில் தோகையோடு ஆடிவரும் காவடி
பழநிமலைப் பாலனுக்குப் பாற்குடத்தால் காவடி
தென்பழநி வேலனுக்குத் தேன்குடத்தால் காவடி
சாமிநாத வேலனுக்குச் சந்தனத்தால் காவடி
பாலசுப்ர மண்யனுக்குப் பஞ்சாமிர்தக் காவடி
ஆறுமுக வேலனுக்கு அழகுமயில் காவடி
வண்ணவண்ணக் காவடி வெற்றிவேலன் காவடி
மாயூர நாதனுக்கு மச்சத்தால் காவடி
குன்றக்குடிக் குமரனுக்குக் குறைவில்லாத காவடி
பக்தரெல்லாம் கொண்டாடும் பழநிவேலன் காவடி
பாமாலை பாடியாடி நாடிவரும் காவடி
கண்கொள்ளாக் காட்சிதரும் கந்தவேலன் காவடி
காவடியாம் காவடி காணவேண்டும் கண்கோடி!

Sunday, October 31, 2010

கந்தா கடம்பா கதிர்வேலா!



கந்தா கடம்பா கதிர்வேலா
காத்திட வருவாய் சிவபாலா
கார்த்திகை மைந்தா கதிர்வேலா
காத்திட வருவாய் சிவபாலா!

அழகா அமுதா அருள்வேலா
அம்பிகை மைந்தா எழில்பாலா
அறுமுக நாதா அருள்வேலா
அடிமலர் பணிந்தோம் எழில்பாலா!

வருவாய் வருவாய் வடிவேலா
வள்ளி மணாளா உமைபாலா
தருவாய் தருவாய் வடிவேலா
திருவருள் தருவாய் உமைபாலா!


--கவிநயா

Monday, October 18, 2010

அன்பருக்கு அன்பன்!



அன்பருக்கு அன்பனே நீ வாவா ஷண்முகா

ஆறுபடை வீடுடையாய் வாவா ஷண்முகா

இன்பமய ஜோதியே நீ வாவா ஷண்முகா

ஈசனுமை பாலகனே வாவா ஷண்முகா

உரகசயனன் மருகோனே வாவா ஷண்முகா

ஊமைக் குபதேசித்தவா வாவா ஷண்முகா

எட்டுக்குடி வேலவா நீ வாவா ஷண்முகா

ஏறுமயில் வாகனனே வாவா ஷண்முகா

ஐங்கரக் கிளையவனே வாவா ஷண்முகா

அகிலலோக நாயகனே வாவா ஷண்முகா

ஒய்யாரி வள்ளிலோலா வாவா ஷண்முகா

ஓம்காரத் தத்துவமே வாவா ஷண்முகா

ஔவைக் குபதேசித்தவா வாவா ஷண்முகா

அருணகிரிக் கருள்சுரந்தாய் வாவா ஷண்முகா

ஆடிவாநீ ஓடிவாநீ வாவா ஷண்முகா

ஓடிவாநீ ஆடிவாநீ வாவா ஷண்முகா



வெற்றிவேல் முருகனுக்கு... அரோஹரா!!

Monday, October 11, 2010

ஆலோலம்!

ஒருவர் பாட, குழுவினர் ஹரோஹரா சொல்லணும்.
இணையத்திலிருந்து எடுத்தது. இட்டவருக்கு நன்றிகள் பல.



ஆலோலம் பாடுகின்ற
வள்ளியம்மை கழுத்தில்
அணியாரம் இட்ட பெருமான் - ஹரோஹரா

ஆகாயம் பூமியிடை
நீராவி போல் வடிவில்
ஆதாரமான பெருமான் - ஹரோஹரா

மேலாளர் கீழாளர்
பேதங்கள் இல்லாது
மெய்யான பெருமான் - ஹரோஹரா

மின்னாகி இடியாகி
மழையாகி காற்றாகி
விளைவாக நின்ற பெருமான் - ஹரோஹரா

கோலாலம்பூர் வளர்
கோ தண்டபாணி - இவன்
கோவில் கொண்டடு மனமே - ஹரோஹரா

கூற்றேதும் வாராது
கொடுநோயும் சேராது
குறையாத வாழ்வு மிகுமே - ஹரோஹரா

ஓம் என்ற சிறு முட்டை
உள் வீடு அவன் வீடு
உன் வீடும் அந்த இடமே - ஹரோஹரா

ஓசைக்கு மணியுண்டு
பூசைக்கு மணமுண்டு
உன் வாழ்வு கந்தன் வசமே - ஹரோஹரா

நாமேன்ற ஆங்காரம்
நமதென்ற எக்காளம்
நடவாது வேலனிடமே - ஹரோஹரா

நடக்கட்டும் பார்ப்போம்
என்றிருக்கட்டும் உன் உள்ளம்
நலம் யாவும் வீடு வருமே - ஹரோஹரா

கோமன்னன் வாழ்கின்ற
கோலாலம்பூர் செந்தூர்
கொடி கட்டி ஆள விடுமே - ஹரோஹரா

கொண்டாடு கொண்டாடு
தெண்டாயுதத் தானை
குறையாது செல்வ மிகுமே - ஹரோஹரா

Wednesday, October 6, 2010

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்!


வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்
வேல்முருகா வேலாயுதா வேல்முருகா வேல்வேல்

ஆறுபடை வீடு கொண்ட ஆறுமுகா வேல்வேல்
ஏறுமயில் வாகனனே வேல்முருகா வேல்வேல்

ஓம்முருகா என்றுதினம் உந்தன் நாமம் வேல்வேல்
ஓயாமல் ஜெபித்திருப்போம் வேல்முருகா வேல்வேல்

பாலாபிஷேகங்கள் ஏற்றுக் கொள்வாய் வேல்வேல்
பக்தர்களைக் காத்திடுவாய் வேல்முருகா வேல்வேல்

தேனாபிஷேகங்கள் ஏற்றுக் கொள்வாய் வேல்வேல்
தெரியாமல் செய்யும்பிழை பொறுத்தருள்வாய் வேல்வேல்

வாசமலர் மாலைகளை ஏற்றுக் கொள்வாய் வேல்வேல்
தேசொளிரும் பாலகனே வேல்முருகா வேல்வேல்

வீசுகின்ற தென்றல் போல வேல்முருகா வேல்வேல்
எங்கள் வாழ்வில் வந்தவனே வேல்முருகா வேல்வேல்

அன்போடு நாங்கள் செய்யும் அத்தனையும் வேல்வேல்
ஆதரவாய் ஏற்றுக் கொண்டு அருள்புரிவாய் வேல்வேல்

--கவிநயா

Sunday, September 19, 2010

சுப்ரமண்யம் சுப்ரமண்யம்



சுப்ரமண்யம் சுப்ரமண்யம்
சண்முக நாதா சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் சுப்ரமண்யம்
சரவண பவனே சுப்ரமண்யம்

சிவ சிவ சிவ சிவ சுப்ரமண்யம்
ஹர ஹர ஹர ஹர சுப்ரமண்யம்
ஹர ஹர ஹர ஹர சுப்ரமண்யம்
சிவ சிவ சிவ சிவ சுப்ரமமண்யம்

சுப்ரமண்யம் சுப்ரமண்யம் பழனி முருகா சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் சுப்ரமண்யம் ஐயப்ப நாதா சுப்ரமண்யம்

சிவ சர வண பவ சுப்ரமண்யம்
குரு சர வண பவ சுப்ரமண்யம்
குரு சர வண பவ சுப்ரமண்யம்
சிவ சர வண பவ சுப்ரமண்யம்

சுப்ரமண்யம் சுப்ரமண்யம் செந்தூர் முருகா சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சண்முக நாதா சுப்ரமண்யம்

சிவ சிவ சிவ சிவ சுப்ரமண்யம்
ஹர ஹர ஹர ஹர சுப்ரமண்யம்
ஹர ஹர ஹர ஹர சுப்ரமண்யம்
சிவ சிவ சிவ சிவ சுப்ரமண்யம்

சுப்ரமண்யம் சுப்ரமண்யம் வயலூர் முருகா சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சண்முக நாதா சுப்ரமண்யம்

குரு சர வண பவ சுப்ரமண்யம்
ஸ்ரீ சர வண பவ சுப்ரமண்யம்
ஸ்ரீ சர வண பவ சுப்ரமண்யம்
குரு சர வண பவ சுப்ரமண்யம்

ஓம் குரு நாதா சுப்ரமண்யம்
ஸ்ரீ குரு நாதா சுப்ரமண்யம்
ஸ்ரீ குரு நாதா சுப்ரமண்யம்
ஓம் குரு நாதா சுப்ரமண்யம்

ஓம் ஓம் ஓம் ஓம் சுப்ரமண்யம்
ஓங்கார ரூபா சுப்ரமண்யம்
ஓங்கார ரூபா சுப்ரமண்யம்
ஓம் ஓம் ஓம் ஓம் சுப்ரமண்யம்

(சுப்ரமண்யம்)