Wednesday, February 2, 2011

ஓம் நமோ நமசிவாய - 2



ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ ந மசிவாய
ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ நமோ
ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ ந மசிவாய
ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ நமோ

ஒருகரத்தில் தீயையேந்தி மறுகரத்தில் உடுக்கையேந்தி
அண்டங்கள் யாவையுமே படைத்துக்காத்து அழிப்பவனே
ஒருகரத்தில் அபயந்தந்து மறுகரத்தில் பாதங்காட்டி
அண்டியவர் யாவரையும் அன்புடனே காப்பவனே

அந்திநிறம் கொண்டவனே ஆதிமூல மானவனே
நந்திதேவ வாகனனே துன்பந்தீர்க்கும் தூயவனே
விந்தைபல புரிபவனே சிந்தையெலாம் நிறைபவனே
சொந்தமென வந்தவனே சோதியாகி நின்றவனே

ஒருபதத்தைத் தூக்கிநின்று மறுபதத்தில் அசுரன்தன்னை
அடக்கிவைத்து அடியவர்க்கு அருள்கொடுக்கும் ஆண்டவனே
ஒருசெவிஎழிற் குண்டலமும் மறுசெவிபனை ஓலைதாங்க
அம்பலத்தில் நடனமிடும் ஆதிசிவ நாயகனே

நஞ்சையுண்ட காரணத்தால் நீலகண்டன் ஆனவனே
அஞ்சுகத்தை வாமங் கொண்டு அர்த்தநாரி யானவனே
நெஞ்சுக்குள்ளே நர்த்தனங்கள் நித்தம்நித்தம் ஆடுவோனே
விஞ்சுகின்ற அன்புசெய்ய சித்தத்துள்ளே வாழுவோனே

ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ ந மசிவாய
ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ நமோ
ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ ந மசிவாய
ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ நமோ

--கவிநயா

பி.கு. போன இடுகையில் இட்ட பாடலில் இன்னும் கொஞ்சம் சேர்த்து...

Saturday, December 25, 2010

ஓம் நமோ நமசிவாய!



ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ

கொன்றையைத் தரித்தவனே காமனை யெரித்தவனே
காலனை யுதைத்தவனே ஓம்நமோ நமோ
மங்கையை வரித்தவனே கங்கையைத் தரித்தவனே
முப்புரம் எரித்தவனே ஓம்நமோ நமோ

செஞ்சடை தரித்தவனே சேந்தனை அளித்தவனே
சிந்தையில் அமர்ந்தவனே ஓம்நமோ நமோ
செந்நிறம் படைத்தவனே சந்திரன் தரித்தவனே
விந்தைகள் புரிந்தவனே ஓம்நமோ நமோ

தன்னுரு மறைத்தவனே தென்திசை தவத்தவனே
தேவரும் துதிப்பவனே ஓம்நமோ நமோ
மண்தனைச் சுமந்தவனே மேனியைப் பகிர்ந்தவனே
தேவியை மணந்தவனே ஓம்நமோ நமோ

அன்பினில் களிப்பவனே ஆனந்தம் அளிப்பவனே
இன்பங்கள் கொடுப்பவனே ஓம்நமோ நமோ
நெஞ்சினில் இருப்பவனே நேசத்தில் மணப்பவனே
துன்பங்கள் அழிப்பவனே ஓம்நமோ நமோ

ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ

--கவிநயா

பி.கு. வைத்தீஸ்வரன் கோவில் வழிநடைப் பயணத்துக்காக ஒருத்தர் மெட்டு கொடுத்து, எழுத முடியுமான்னு கேட்டிருந்தார். அவருக்காக எழுதிய பாடல்...

Monday, December 13, 2010

கோபாலா கோபாலா...

என்னிடம் இருக்கிற 'அருள் வழி துதிகள்' என்ற புத்தகத்திலிருந்து...


கோபாலா கோபாலா
கோகுல நந்தன கோபாலா!

நந்த முகுந்தா கோபாலா
நவநீத சோரா கோபாலா!

வேணு விலோலா கோபாலா
விஜய கோபாலா கோபாலா!

ராதா கிருஷ்ணா கோபாலா
ரமணீய வேஷா கோபாலா!

காளிய மர்த்தன கோபாலா
கௌஸ்துப பூஷண கோபாலா!

முரளீ லோலா கோபாலா
முகுந்தப் பிரியா கோபாலா!

ராதா ரமணா கோபாலா
ராஜீவ நேத்ரா கோபாலா!

யசோதா பாலா கோபாலா
யதுகுல திலகா கோபாலா!

நளின விலோசன கோபாலா
கோமள வசனா கோபாலா!

புராண புருஷா கோபாலா
புண்ய ஸ்லோகா கோபாலா!

கனகாம் பரதா கோபாலா
கருணா மூர்த்தே கோபாலா!

கஞ்ச விலோசன கோபாலா
கஸ்தூரி திலகா கோபாலா!

Wednesday, December 1, 2010

அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பனுக்கு அரோகரா!

ஒருவர் பாட, குழுவினர் 'அரோகரா' போடலாம்...


அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பனுக்கு அரோகரா!
பித்தனுக்குப் பாடம் சொன்ன பாலனுக்கு அரோகரா!

முத்தமிழின் காவலனாம் முருகனுக்கு அரோகரா!
சித்தமெல்லாம் நிறைந்திருக்கும் செல்வனுக்கு அரோகரா!

வெற்றிவடி வேலனுக்கு வீரனுக்கு அரோகரா!
சக்திசிவ பாலனுக்கு சேந்தனுக்கு அரோகரா!

ஆனைமுகன் இளவலுக்கு அன்புடனே அரோகரா!
ஆறுமுக சாமிக்கு ஆசையோடு அரோகரா!

வள்ளியம்மை நாதனுக்கு வாஞ்சையுடன் அரோகரா!
சொல்லிச் சொல்லிப் பாடிடுவோம் செல்லத்துக்கு அரோகரா!


--கவிநயா

Monday, November 22, 2010

ஓம் சக்தி ஓம்!


மூவாறு கரங்களுடன்
முகம்பொழியும் கருணையுடன்
மூவுலகும் காக்க வந்தாய்
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!

சேலாடும் விழிகளுடன்
நூலாடும் இடையினுடன்
எண்திசையும் வெல்ல வந்தாய்
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!

வேல்விழிகள் பளபளக்க
கோபத்திலே ஜொலிஜொலிக்க
வேகம்மிகக் கொண்டு வந்தாய்
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!

வீரமகள் வந்தணைக்க
வெற்றிமகள் சேர்ந்திருக்க
மகிஷன்சிரம் அறுத் தெறிந்தாய்
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!

காளியென நீலியென
கனிவுமிகும் அன்னையென
காப்பாற்ற வந்தவளே
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!

சண்டியென சூலியென
சடுதியிலே வந்துஎங்கள்
சங்கடங்கள் தீர்ப்பவளே
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!

ஓமென்று உன்நாமம்
ஓயாமல் உரைத்திருந்தால்
ஓடோடி வருவாயே
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!

வீணென்று இப்பிறவி
ஆகாமல் இக்கணமே
விரைந்தேகி வருவாயே
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!


--கவிநயா

பி.கு. ஏற்கனவே அம்மன் பாட்டில் இட்ட பாடல். ஆனால் பஜனைக்கு நல்லாருக்கும்னு தோன்றியதால் இங்கேயும் சேமித்து வைக்கிறேன்...

Sunday, November 14, 2010

காவடியாம் காவடி!


காவடியாம் காவடி கந்தவேலன் காவடி
கண்கொள்ளாக் காட்சி தரும் கடம்பனுக்குக் காவடி
வேல்முருகன் நாமத்திலே விதவிதமாய்க் காவடி
வெற்றிவேலன் காவடி வீரவேலன் காவடி
சிங்கார வேலனுக்குச் சின்னச்சின்னக் காவடி
வண்ணமயில் தோகையோடு ஆடிவரும் காவடி
பழநிமலைப் பாலனுக்குப் பாற்குடத்தால் காவடி
தென்பழநி வேலனுக்குத் தேன்குடத்தால் காவடி
சாமிநாத வேலனுக்குச் சந்தனத்தால் காவடி
பாலசுப்ர மண்யனுக்குப் பஞ்சாமிர்தக் காவடி
ஆறுமுக வேலனுக்கு அழகுமயில் காவடி
வண்ணவண்ணக் காவடி வெற்றிவேலன் காவடி
மாயூர நாதனுக்கு மச்சத்தால் காவடி
குன்றக்குடிக் குமரனுக்குக் குறைவில்லாத காவடி
பக்தரெல்லாம் கொண்டாடும் பழநிவேலன் காவடி
பாமாலை பாடியாடி நாடிவரும் காவடி
கண்கொள்ளாக் காட்சிதரும் கந்தவேலன் காவடி
காவடியாம் காவடி காணவேண்டும் கண்கோடி!

Monday, November 8, 2010

ஓம் நமசிவாய ஓம்!



ஓம் நம சிவாய ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம்
ஓம் நம சிவாய ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம்

இமயத்தின் முடியில் உமையுடன் இருப்பான்
ஓம் நம சிவாய ஓம்
இதயத்தில் இருத்த இன்பங்கள் அளிப்பான்
ஓம் நம சிவாய ஓம்

அண்டங்கள் அசைய அவன்நட மிடுவான்
ஓம் நம சிவாய ஓம்
தண்டைகள் இசைய திருநடம் புரிவான்
ஓம் நம சிவாய ஓம்

ஒருசிரிப் பினிலே முப்புரம் எரித்தான்
ஓம் நம சிவாய ஓம்
எரிநெருப் பினிலே முருகனை அளித்தான்
ஓம் நம சிவாய ஓம்

தென்மு கமாக தவத்தினில் இருப்பான்
ஓம் நம சிவாய ஓம்
சண் முகனிடத்தில் மந்திரம் கேட்டான்
ஓம் நம சிவாய ஓம்

காமனை எரித்தான் கங்கையைத் தரித்தான்
ஓம் நம சிவாய ஓம்
கண்மணி உமையை இடத்தினில் வரித்தான்
ஓம் நம சிவாய ஓம்

ஓம் நம சிவாய ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம்
ஓம் நம சிவாய ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம்


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://aboutshiva.com/about_shiva_home.html