Tuesday, October 4, 2011

அரஹரோஹரா!



அரஹரோஹரா முருகா அரஹரோஹரா
அரஹரோஹரா கந்தா அரஹரோஹரா
அரஹரோஹரா குமரா அரஹரோஹரா
அரஹரோஹரா வேலா அரஹரோஹரா

பச்சை மயில் வாகனனே அரஹரோஹரா
பழனி மலை பாலகனே அரஹரோஹரா
கச்சை யிலே உன் பெயரை அரஹரோஹரா
கச்சி தமாய் கட்டிக் கொண்டோம் அரஹரோஹரா

காவடிகள் எடுத்து வந்தோம் அரஹரோஹரா
கால்கடுக்க ஆடிவந்தோம் அரஹரோஹரா
வேலெடுத்து நீ வரணும் அரஹரோஹரா
வேதனைகள் தீர்த்திடணும் அரஹரோஹரா

(அரஹரோஹரா)

கண்மணியே கனியமுதே அரஹரோஹரா
கனிந்தநெஞ்சிற் கினியவனே அரஹரோஹரா
(ஞானப்)பழமுன்னைத் தேடிவந்தோம் அரஹரோஹரா
பழவினைகள் விரட்டிடுவாய் அரஹரோஹரா

(அரஹரோஹரா)

பலவாறாய் உனையிங்கு அரஹரோஹரா
பாசமுடன் அழைத்தோமே அரஹரோஹரா
பச்சைமயில் மீதேறி அரஹரோஹரா
இக்கணமே வந்திடுவாய் அரஹரோஹரா

(அரஹரோஹரா)


--கவிநயா

Tuesday, September 20, 2011

சீக்கிரமாய் வா!


முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா வா!
பக்தர்க் கருளும் சக்திக் கொழுந்தே
சரவண பவனே வா!

வண்ண மயிலேறி வாகாய் அமர்ந்து
சின்னக் குமரா வா!
சின்னக் குழந்தை வடிவில் ப்ரணவ
பொருள் சொன்னவனே வா!

விண்ணும் மண்ணும் வியந்தே போற்றும்
வடிவே லவனே வா!
கண்ணும் மனமும் கசியத் துதித்தோம்
கண்ணின் மணியே வா!

கன்னல் தமிழில் கவிதை சொல்வேன்
செல்லக் குமரா வா!
மின்னல் போலே எம்மைக் காக்க
விரைந்தே நீயும் வா!

சொல்லும் கவியில் சொல்லாய் பொருளாய்
சுவையாய் அமைவாய் வா!
கல்லும் கனியும் தமிழின் சுவையில்
கனிந்தே நீயும் வா!

சரவண பவனே சண்முக குகனே
சடுதியில் இங்கே வா!
சங்கரன் மகனே சங்கடம் தீர்க்க
சீக்கிரமாய் நீ வா!


--கவிநயா

ஒவ்வொரு பத்திக்கும் பிறகு,

"முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா வா"

என்கிற வரிகளை குழுவினர் இரண்டு முறை பாடலாம்.

Wednesday, August 31, 2011

கணபதியே போற்றி போற்றி!


இந்தப் பாடலை சுப்பு தாத்தா குரலில் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா! 

கார்மேக நிறங் கொண்ட கருணைமிகு கணபதியே
உன்பாதம் சரணமய்யா

பார்போற்றும் சதிபதியாம் பரமசிவன் பார்வதியின்
புதல்வனே சரணமய்யா

பேர்கொண்ட முதற்பிள்ளை தானென்று திகழும்உன்
திருப்பாதம் சரணமய்யா

மார்தன்னில் திருமகளைத் தாங்குகின்ற மாலவனின்
மருமகனே சரணமய்யா

வித்துக்கு வித்தாகி முத்தான முதற்பொருளே
முதல்வனே சரணமய்யா

சக்திக்குச் சொத்தான மத்தகக் கணபதியே
மலர்ப்பாதம் சரணமய்யா

தொந்திக்குள் உலகத்தை பந்தைப்போல் வைத்தாளும்
கஜமுகனே சரணமய்யா

வந்தித்து அனுதினமும் சிந்தித்து உனைப்பணிந்தோம்
சிவைமைந்தா சரணமய்யா

சுழிபோட்டு தொடங்கிவிட்டால் வழியெல்லாம் நேராக்கி
அருள்புரிவாய் போற்றி போற்றி

அழியாத வினைகளையும் பொழிகின்ற கருணையினால்
அழித்திடுவாய் போற்றி போற்றி

மரத்தடியாய் இருந்தாலும் மறுக்காமல் குடியேறும்
மயூரேசா போற்றி போற்றி

சிரத்தையுடன் பணிகின்றோம் சீக்கிரமே வந்திடுவாய்
திருவடிகள் போற்றி போற்றி!


--கவிநயா

Wednesday, August 3, 2011

எனை விடாத ஹரி நாமம்!



ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா

அநாதி வேதமும் புராணமும் சொல்லும்
அபூர்வ குண நாமம்
சதா என் நாவினில் நிலாவியே எனை
விடாத ஹரி நாமம்

ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா

மாமுனி நாரதர் வீணையில் ஊறிய
மங்கல மய நாமம்
நானறி யாதெனை ஆண்டருள் தந்தெனை
விடாத ஹரி நாமம்

ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா

உத்தமன் இட்ட தலத்தினில் அக்கணம்
உதித்த திரு நாமம்
பக்தி இலாத எனக்கு இசைந்தெனை
விடாத ஹரி நாமம்

ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா

ஆதி மூலமெனும் மாமத யானைக்கு
அருள வந்த நாமம்
ஏது மிலாதெனை என் இதய மிகுந்தெனை
விடாத ஹரி நாமம்

ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா

சராசரங்களில் எல்லாம் நிறைந்துள்ள
மஹா புனித நாமம்
கெடாத வாறருள் நடாவியே எனை
விடாத ஹரி நாமம்

ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா

மஹா ஜெபம் செய்யும் நிஜானுபூதியில்
மனோ ரமண நாமம்
ஸரோஜ மோஹன சொரூபமாய் எனை
விடாத ஹரி நாமம்

ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா

**

படத்தைப் பெரிதுபடுத்திப் பாருங்க!

பாடல்: 'அருள் வழி துதிகள்' என்ற புத்தகத்திலிருந்து...
படம்: http://www.nidokidos.org/threads/45626-Tirupati-Venkateswara-swamy-pictures.

Tuesday, June 14, 2011

அம்மா சரணம்!



அம்மா சரணம் அம்மா சரணம் அம்பிகை சரணம் ஓம்சக்தி!
அன்பின் வடிவே அருளின் பொருளே அடைக்கலம் வந்தோம் ஸ்ரீசக்தி!

அன்பால் உன்றன் நாமம் சொன்னோம் சரணம் சரணம் ஓம்சக்தி!
உன்பால் கொண்ட அன்பால் உன்னைப் போற்றிப்பணிந் தோம் ஸ்ரீசக்தி!

கண்ணால் காக்கும் கருணை உருவே சரணம் சரணம் ஓம்சக்தி!
முன்னால் நின்று காக்கும் தெய்வத் தாயே சரணம் ஸ்ரீசக்தி!

பண்ணால் பாடி பாதம்பணிந் தோம் சரணம் சரணம் ஓம்சக்தி!
பலநாள் பாதம் நோகநடந் தோம் உன்னைக் காண ஸ்ரீசக்தி!

கல்லும் முள்ளும் காலுக்கு மலராம் சரணம் சரணம் ஓம்சக்தி!
குண்டும் குழியும் கண்ணுக்கு ஒளியாம் உன்றன் அருளால் ஸ்ரீசக்தி!

வழிக்குத் துணையாய் வருவாய் அம்மா சரணம் சரணம் ஓம்சக்தி!
விரைவாய் வருவாய் விலகா திருப்பாய் சரணம் சரணம் ஸ்ரீசக்தி!

உன்னைத் துதித்திட துன்பம் தீருது சரணம் சரணம் ஓம்சக்தி!
உன்னை இதயத்தில் இருத்திட இன்பம் வளருது அம்மா ஸ்ரீசக்தி!

குறையா அன்பை நிறைவாய்த் தருவாய் சரணம் சரணம் ஓம்சக்தி!
மறைவாழ் மணியே மனம்வாழ் உமையே சரணம் சரணம் ஸ்ரீசக்தி!!


--கவிநயா

Sunday, April 10, 2011

ராம ராம ராம ராம என்னும் நாமமே...

அனைவருக்கும் இனிய ஸ்ரீராம நவமி நல்வாழ்த்துகள்!



ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத நாதன் தந்த நல்ல வேதமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத சங் கடங் கள் தூர ஓடுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத துயரம் யாவும் தூசு ஆகுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத நற் பலன் கள் வந்து சேருமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத நம்மைக் காக்கும் காவ லாகுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத கோடி நன்மை யாவும் கூடுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத இம்மை மறுமை இன்றி தீருமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத வாயு மைந்தன் அன்பு மீறுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத நெஞ்சம் பாடும் இன்ப கீதமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத உள்ளம் அன்பு வெள்ள மாகுமே

--கவிநயா

சுப்பு தாத்தா பாடித் தந்தது... மிக்க நன்றி சுப்பு தாத்தா!

Friday, March 18, 2011

வேங்கைமரமானவரே வேலாயுதா!



வேல்வேல் வேல்முருகா வேலாயுதா
வேங்கைமர மானவரே வேலாயுதா (வேல்

வேல்வேல் வேல்முருகா வேலாயுதா
வேதனைகள் தீருமையா வேலாயுதா

குன்றத்தில் அமர்ந்தவனே வேலாயுதா
குறைகள் எல்லாம் தீர்த்துவைப்பாய் வேலாயுதா
அருட்சுடராய் வந்தவரே வேலாயுதே
ஆறுமுக மானவரே வேலாயுதா (வேல்

செந்தூரில் வாழ்பவனே வேலாயுதா
சென்மமதை தீர்த்திடுவாய் வேலாயுதா
பழனிமலை ஆண்டவரே வேலாயுதா
பழவினையை நீக்கிடுவாய் வேலாயுதா (வேல்

சுவாமிமலை சுவாமிநாதா வேலாயுதா
சுப்ரமண்ய மானவரே வேலாயுதா
திருத்தணிகை மலைசெல்வனே வேலாயுதா
திருவருளை அருளவேண்டும் வேலாயுதா (வேல்

சோலைமலை முருகனே வேலாயுதா
சொர்க்கமெல்லாம் தெரியுதப்பா வேலாயுதா
குன்றக்குடிக் குமரனே வேலாயுதா
குறவள்ளி மணாளரே வேலாயுதா (வேல்

காவடிகள் ஆட்டத்திலே வேலாயுதா
கஷ்டமெல்லாம் தீர்ந்துபோகும் வேலாயுதா
பாற்குடத்தின் கூட்டமெல்லாம் வேலாயுதா
பார்க்கப்பார்க்க ஆனந்தமே வேலாயுதா (வேல்

கருணையோடு காத்தருள்வாய் வேலாயுதா
கந்தாஉன்னை தெண்டனிட்டோம் வேலாயுதா (வேல்